Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

ராமநாதபுரத்தில் - சுகாதாரப் பணியாளர் பணியிடை நீக்கம் :

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள்

பணியாற்றி வருகின்றனர்.

இதில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மையத்தில் பணியாற்றிய

மருத்துவப் பணியாளர் நாகேந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு

அங்குள்ள சுகாதாரப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தும், கரோனா

நோயாளிகளை வெளியில் அழைத்து வந்து போராட்டம் நடத்தத் தூண்டியுள்ளார்.

இதுகுறித்து புகாரின்பேரில் நாகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி

தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x