Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
காரைக்குடியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் நகராட்சி ஊழியர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க வியாபாரிகள் தொப்பி வழங்கினர்.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காரைக்குடி நகராட்சி ஊழியர்கள் வார்டு வாரியாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய்கள் குறித்தும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளித் தொல்லை குறித்தும் கணக் கெடுத்து வருகின்றனர்.
மேலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விவரங் களையும் சேகரிக்கின்றனர். கரோனா அறிகுறி இருப்பதைக் கண்டறிந்தால் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினருக்குப் பரிந்துரைக்கின்றனர்.
இந்தப் பணியில் 80-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், அவர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 100 தொப்பி களை நகராட்சி ஆணையர் லட்சு மணனிடம் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT