Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி காவலர் உயிரிழப்பு :

கிருஷ்ணகிரி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி காவலர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் மேல் பாஷாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (35). இவர் கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வந்தார். மாற்று பணியாக கிருஷ்ணகிரி டிஎஸ்பி வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு முகாமில் கடந்த 24-ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், 26-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனில்லாமல் நேற்று அதிகாலை உயிரிழந்தார். சிலம்பரசனுக்கு சுரேகா (26) என்ற மனைவியும், நாத் (5), சாய்பிரசாத் (3) என 2 மகன்களும் உள்ளனர். கரோனா தொற்றால் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x