Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத 5,000 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட் டன.அதில் 778 துப்புரவாளர், 494 இரவுக் காவலர் என மொத்தம் 1,272 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, தமிழக அரசின் பரிசீல னையில் உள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, 1,272 பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது என தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT