Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

வேலாயுதம்பாளையத்தில் - கெட்டுப்போன இறைச்சி: பிரியாணி கடைக்கு சீல் :

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்திய பிரியாணி கடைக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் கெட்டுப்போன கோழி இறைச்சியை பயன்படுத்துவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

இதையடுத்து புஞ்சை புகழூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் இந்த பிரியாணி கடைக்கு சொந்தமான கிடங்கு, பிரியாணி தயார் செய்யும் சமையல் கூடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு கெட்டுப்போன கோழி இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x