Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2) நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் தெரிய வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 73.9 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி களில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் இன்று(மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, ஒவ்வொரு மையத்தி லும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், காவல் துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்த ராவ் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதி களுக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதன்படி, திருவிடைமருதூர் தொகுதிக்கு சாகாப் சிங், கும்பகோணம் தொகுதிக்கு ஷிப நாராயண் நந்தா, பாபநாசம் தொகுதிக்கு சர்மா, திருவையாறு தொகுதிக்கு அமீர், தஞ்சாவூர் தொகுதிக்கு அக்ரம் பாஷா, ஒரத்த நாடு தொகுதிக்கு ஜிஜேந்ரா ககுஷ்டி, பட்டுக்கோட்டை தொகுதிக்கு கெ.சுதாராணி, பேராவூரணி தொகுதிக்கு நிகார் ரஞ்ஜன்தாஸ் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள்.
இத்தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் தெரிய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கான முடிவு களை அறிவிப்பதில் நேரம் மாறுபடலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT