Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

கும்பகோணத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து :

கும்பகோணம்: கோவையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் கும்பகோணம் கிளை ஏஜென்சியை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு வருவதற்கும், கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குச் செல்வதற்கும், ஆம்னி பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும், பார்சல் சர்வீஸ் மூலம் பொருட்களை அனுப்பவும் புக்கிங் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த டிராவல்ஸ் ஏஜென்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் மற்றும் பார்சல் அனுப்புவதற்காக புக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், டிராவல்ஸ் நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பின. இந்த தீ விபத்து குறித்து மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x