Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

திருமருகல் அருகே போலகம் ஊராட்சியில் - சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் : மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே போலகம் ஊராட்சியில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் தட்டாரத் தெருவில் இருந்து, கன்னிக்கோவில் தெரு வழியாக திருமலைராஜன் ஆறு வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது. போலகம் ஊராட் சியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்தச் சாலை வழியாகத்தான் அண்ணா மண்டபம் வந்து, அங்கிருந்து காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருநள்ளாறு, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்குச் சென்றுவருகின்றனர்.

அதேபோல, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட் களை உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு எடுத்துச் செல்வ தற்கும் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து, காயம் அடைகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தட்டாரத் தெருவிலிருந்து கன்னிக்கோவில் வழியாக திருமலைராஜன் ஆறு வரை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x