Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

நெல்லை, தென்காசியில் மே தின கொடியேற்று விழா :

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, துரை, சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில்மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சங்கத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சலீம், மாவட்டச் செயலாளர் செய்யது மைதீன், மாவட்ட துணைத் தலைவர் கல்வத்பாய், மாவட்ட பொருளாளர் சுல்தான் பாதுஷா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் புகாரி சேட்,பாளை தொகுதி செயலாளர் சனா சிந்தா கலந்துகொண்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மே தினக் கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் பரமசிவன் ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் உரையாற்றினார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன்,கருப்பசாமி, மாரியப்பன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கற்பகவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x