Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

அடவிநயினார் அணையில் 12 மி.மீ. மழை :

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான கோடை மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் வழக்கம்போல் நேற்று காலை வெப்பம் அதிகமாக இருந்தது.

சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மதியத்துக்குப்பின் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப் பகுதியில் 12 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 7.40 மி.மீ., ஆய்க்குடியில் 4.20 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பின. அடவிநயினார் அணையில் 90 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

நீர்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை போதிய அளவு பெய்யாததாலும், தொடர் வறட்சியாலும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 67.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 58 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 50.63 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீரின்றி வறண்டது. தற்போது சேறும், சகதியுமாக 10.75 அடி நீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x