Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
கோவில்பட்டி ஊருணித் தெருவில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், முன்னாள் தலைவர் வீராச்சாமி முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் நாராயணசாமி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான 6 பண்டல் கையுறைகளை மருத்துவர் ராமமூர்த்தியிடம் வழங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT