Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

குமரியில் மீன், இறைச்சிக் கடைகள் அடைப்பு : பொதுமக்கள் ஒத்துழைப்பு

குமரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மீன், இறைச்சிக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த வாரம்ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு குமரி மாவட்டத்தில் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்தில் சனிக்கிழமையான நேற்று இறைச்சி, மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

கடந்த வாரம் இக்கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இறைச்சி, மீன் கடைகளை அடைத்து வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கினர். இதுபோல் பொதுமக்களும் பொது இடங்கள், கடைகளில் கூடுவதை தவிர்த்தனர்.

நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், திங்கள்நகர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல் முழு ஊரடங்கான இன்றும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதிகம் விற்பனையாகும் வாரத்தின் இரு நாட்களும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டதால் ரூ. 5 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரம் இரு நாட்கள் இறைச்சி கடைகள் திறக்கப்படாது என்பதால் நேற்று முன்தினம் கோழி, ஆட்டு இறைச்சிக் கடைகள், மீன்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x