Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

இரணியலில் 54 மி.மீ. மழை - பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்தது :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டுமழை பெய்து வருகிறது. கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பொழிந்து வரும் மழையால் குளிரான தட்ப வெப்பம் நிலவுகிறது. அதிகபட்சமாக இரணியலில் 54 மி.மீ., மழை பெய்தது.ஆனைக்கிடங்கில் 34 மி.மீ., குருந்தன்கோட்டில் 22, மாம்பழத்துறையாறில் 35, முக்கடல் அணையில்19, நாகர்கோவிலில் 24, குழித்துறையில் 20, கன்னிமாரில் 22, பூதப்பாண்டியில் 13 மிமீ., மழை பெய்தி ருந்தது.

குறிப்பாக மலையோரங்கள், அணைப்பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் நீர் மட்டம் 54 அடியாக உள்ளது. பொய்கையில் 17, மாம்பழத்துறையாறில் 15 அடி தண்ணீர் உள்ளது. ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்காக அணைகள் திறக்கப்படவுள்ள நிலையில் போதிய தண்ணீர் அணைகளில் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x