Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

ஆரணியில் இளைஞர் கொலை :

ஆரணியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் ஆனந்தன் மகன் யோகேஷ் (23). இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் இருந்த யோகேஷை நேற்று பிற்பகல் சிலர் வெளியே வர வழைத்துள்ளனர். அப்போது அவர்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்ட யோகேஷ் தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அவரை, 6 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆரணி நகர காவல்துறையினர், யோகேஷ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x