Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

பெட்டி கடையில் திருட்டு :

வாணியம்பாடியில் பெட்டிக்கடை யின் சிமென்ட் கூரையை உடைத்து சிகரெட், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின் றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் முருகன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்கச் சென்றார். அப்போது, நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிகரெட், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினருடன் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர், மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x