Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

கரோனா நோயாளிகளுக்கான படுக்கை, ஆக்சிஜன் தேவைக்கு உதவ - ஒருங்கிணைந்த கட்டளை மையம் தொடக்கம் : 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும்

கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவைக்கு உதவ ஒருங்கிணைந்த கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் 2-வதுஅலையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளன.

தற்போதுள்ள ‘104’ சுகாதாரசேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில்படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பதுஆகியவற்றுக்கான சிறப்பு மையமாக இது செயல்படும்.

இந்த மையம் 24 மணி நேரமும் இணையவழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகளின் நிலையை அறிந்துகொண்டு, அதன் மூலம் தேவைப்படுவோருக்கு உதவும்.

சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும். படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்வது உள்ளிட்ட பணிகளிலும் இம்மையம் ஈடுபடும்.

ட்விட்டர் கணக்கு தொடக்கம்

படுக்கைகள் தேவைப்படுவோருக்கு உதவ ஒரு புதிய ட்விட்டர்கணக்கு (@104GoTN) தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கின் நோக்கம், நோயாளிகளுக்கு படுக்கை உள்ளிட்ட உதவிகளைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும். அனைத்து கோரிக்கைகளும் இந்த மையத்தின் வழியாக கையாளப்படும்.

இதை பரவலாக மக்களிடையே கொண்டுசேர்க்க, ட்விட்டர் கணக்கில் #BedsForTN என்னும் ஹாஸ்டாக் பயன்படுத்தப்படும். தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த, இம்மையம் குறிப்பிடத்தக்க துணை கட்டமைப்பாக இருக்கும் என்றுதமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x