Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

பாளையங்கோட்டை சிறையில் கொலையான : கைதியின் உடலை வாங்க வேண்டும் : உறவினர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

பாளை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த பாவநாசம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தமனு: பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட கைதி முத்துமனோ மற்றும் அவரது நண்பர்களை சில நாட்களுக்கு முன்பு மற்றகைதிகள் தாக்கினர். இதில் முத்து மனோ கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

முத்துமனோவின் உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வும், அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும், கைதிகள் மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத சிறைத் துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்துமனோ கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முத்து மனோவின் உடலை பெற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது. அதன் பிறகும் முத்து மனோவின் உடலை உறவினர்கள் வாங்கவில்லை. இது தொடர்பாக பேலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்து,முத்து மனோவின் உடலை அவரதுஉறவினர்கள் இன்றே (மே 1) பெற்றுச் செல்ல உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x