Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
சென்னையில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரைத் தாக்கி நகை பறிக்கப்பட்டது.
திருத்தணியைச் சேர்ந்தவர் ரேகா (38). இவர் சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.10 மணியளவில் பணியை முடித்து விட்டு ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
ஐசிஎப், காண்ஸ்டபிள் சாலை, ஆர்பிஎப் பரேடு மைதானம் அருகே சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் பெண் காவலர் ரேகாவை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பினர். இதைத் தடுக்க முயன்றதில், பெண் காவலருக்கு தாடை, இடது காலில் காயம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT