Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் - கோடை விடுமுறை கால நீதிபதிகள் அறிவிப்பு :

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று (மே 1) முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 5, 6, 12, 13, 19, 20, 26, 27 ஆகிய 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடுமுறையின் முதல் பகுதியில் மே 5, 6 ஆகிய நாட்களில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாகவும் ரிட் மனுக்களை விசாரிப்பர். நீதிபதி எஸ்.ஆனந்தி, ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பர்.

இரண்டாம் பகுதியில் மே 12, 13 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முதலில் அமர்விலும், பின்னர் தனியாக ரிட் மனுக்களை விசாரிக்கின்றனர். நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பர்.

3-ம் பகுதியில் மே 19, 20 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், என்.ஆனந்த வெங்கடேஷ் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாகவும் ரிட் மனுக்களை விசாரிப்பர். ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரிக்கிறார்.

4-ம் பகுதியில் மே 26, 27 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.தாரணி ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாகவும் ரிட் மனுக்களை விசாரிப்பர். நீதிபதி கே.முரளிசங்கர், ஜாமீன், முன் ஜாமீன் மனுக்களை விசாரிக் கிறார். கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் காணொலி வழி யாகவே விசாரணை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x