Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

மதுரையில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் : நரிக்குறவர்களுக்கு ஊசி போட ஏற்பாடு

கரோனா 2-வது அலை பரவலால், மதுரையில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதையொட்டி, தடுப்பூசித் திருவிழா என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு சுஜி கெல்த் கேர், வாய்ஸ் டிரஸ்ட் பவுண்டேசன், மாவட்ட சுகாதார இணை இயக்குநர், நகர்நல அலுவலகம், மாநகர் போக்குவரத்துக் காவல் துறையினர் மற்றும் ராஜ்மகால் சில்க்ஸ் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. மதுரை விளக்குத்தூண் பகுதியில் கடந்த ஏப். 26-ல் தடுப்பூசி திருவிழா விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல் துணை ஆணையர் சுகுமார் தொடங்கி வைத்தார். வாய்ஸ் டிரஸ்ட் தலைவர் முருகேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. கள்ளந்திரி வட்டாரம், சக்கிமங்கலம் வட்டாரம் மற்றும் சாத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வேன் மூலம் பிரச்சாரம் நடந்து வருகிறது. துண்டு பிரசுரங்கள், விளக்க கையேடுகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் சக்கிமங்கலம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் 70-க்கும் மேற்பட்டோருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று இப்பிரச்சார வாகனம் நாகமலைப் புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட மேற்கு வட்டாரப் பகுதி கிராமங்களுக்குச் செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x