Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி மாநகர காவல் துறை, மாவட்ட சித்த மருத்துவ பிரிவு, பிஷப் ஹீபர் கல்லூரியின் என்எஸ்எஸ் ஆகியவற்றின் சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி புத்தூர் நால்ரோடு சந்திப்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தொடங்கிவைத்தார்.
பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா, உறையூர் இன்ஸ்பெக்டர் மணிராஜ் உள்ளிட்டோர், அவ்வழியாக பயணம் செய்த 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினர். மேலும், எமதர்ம ராஜா வேடமிட்ட நபர் கரோனா தொற்றின் ஆபத்து, பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஏராளமான என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்று, கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT