Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
திருச்சி: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அந்தநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.இளவரசன் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயிலில் இருந்து முருங்கப்பேட்டை பேருந்து நிலையம் வரையிலான பகுதிக்குள் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இந்த விபத்துகளில் பெரும்பாலும் உயிரிழப்பு நேரிடுகிறது. எனவே, காளியம்மன் கோயிலில் இருந்து முருங்கப்பேட்டை பேருந்து நிலையம் வரை சாலையில் மையத் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT