Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

ஊழியர்களுக்கு கரோனா தொற்று; கும்பகோணத்தில் தனியார் வங்கி மூடல் :

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த வங்கி நேற்று முதல் மூடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, விடுப்பில் சென்ற அந்த ஊழியர் கரோனா பரிசோதனை செய்து கொண்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, வங்கியில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களுக்கும், கும்பகோணம் நகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அந்த வங்கியில் வேலை பார்க்கும் 3-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, அந்த தனியார் வங்கி நேற்று முதல் மூடப்பட்டது. இதனால், அந்த வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்வதற்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x