Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் :

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இலத்தூர் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் தேவி கபசுரக் குடிநீரையும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இதுபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கி, கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x