Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சங்கனாப்பேரியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த சேக் உசேன் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து, புளியங்குடி வனப் பகுதியில் விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT