Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (41) என்பவரை கோயிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக கடந்த 18-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக சீவலப்பேரி போலீஸார் 14 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் சீவலப்பேரியை சேர்ந்த முத்தையா மகன் பழனி (27) என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT