Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தடையில்லா சான்று கோரிய மனு தள்ளுபடி :

தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில் தற்போதுள்ள மசூதியை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக மசூதி கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தென்காசி பஜார் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில் மசூதி உள்ளது. இந்த மசூதியை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய மசூதி கட்ட தடையில்லா சான்று வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், அதே பகுதியில் புதிய மசூதி கட்ட புதிதாக 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை மனுதாரர் பார்வையிட்டு, விரும்பும் இடத்தை தெரிவித்தால் அங்கு மசூதி கட்ட அனுமதி வழங்கப்படும்.

தற்போதுள்ள இடத்தில் புதிதாக மசூதி கட்டினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x