Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

குடிநீர் கேட்டு பேருந்து சிறைபிடிப்பு :

அரக்கோணம் நகராட்சியில் முறையான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியில் கடந்த 3 மாதங் களாகவே முறையான குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறை பிடித்தனர். இந்த தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி யளித்தனர்.

இதனையேற்று, பொது மக்கள் மறியலை கைவிட்டனர். சிறை பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து விடுவிக்கப்பட்டதுடன் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x