Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. பொது சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான (சிலாட்) விண்ணப்ப பதிவு கடந்த ஜனவரியில் தொடங்கியது. இத்தேர்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிலாட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக, கரோனா பரவல் அதிகரிப்பதால் சிலாட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனால், முன்கூட்டியே மே முதல் வாரத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது. தற்போது, விண்ணப்பிக்கும் அவகாசம், மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வு முன்கூட்டி நடத்தப்பட வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 13-ல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT