Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
சேலம் பட்டு வளர்ச்சி துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் சி.அஜித் ராஜா (27). மளிகை கடை நடத்திவந்தார். இவரது நண்பர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் எஸ்.மணி கண்டன் (29).
அஜித் ராஜா அரசு வேலையில் சேர முயற்சி செய்து வருவதையறிந்த மணிகண்டன், கடந்தாண்டு சேலம் பட்டு வளர்ச்சி துறையில் உதவியாளர் பணி காலியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த வேலையில் நேரடியாக சேர ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், பணத்தை கொடுத்தால் தான் ஏற்பாடு செய்வதாகவும் அஜித் ராஜாவிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அதை நம்பி ரூ.4.50 லட்சம் தொகையை அஜித்ராஜா மணிகண்டனிடம் அளித்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய மணிகண்டன் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துவந்தார். இதையடுத்து, அஜித் ராஜா செல்வபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் கடந்தாண்டு டிசம்பர் 29-ம் தேதி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று முன்தினம் மணிகண்டனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT