Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

சேலம் அரசு மருத்துவமனையில் : புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம் :

சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x