Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

புதிய நாடாளுமன்றம் அவசியம் அல்ல: ராகுல் காந்தி தாக்கு :

இப்போதைய சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அவசியம் இல்லை என்றும் மத்திய அரசுக்குதொலைநோக்கு பார்வைதான் அவசியம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதிசெய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்தசூழலில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்ட்ரல் விஸ்டா திட்டம் அவசியமில்லை. மத்திய அரசுக்கு தொலைநோக்கு பார்வைதான் அவசியம்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x