Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

கரோனா சூழலில் பேராசிரியர்களை - கல்லூரிக்கு வரவழைக்க கூடாது : கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

பேராசிரியர்களை கல்லூரிக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்றுஅனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை மீறிபல கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு நேரில் வரவழைப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அனைத்து கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘‘மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கவோ, தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) சார்ந்த பணிகள் அல்லது இதர பணிகளுக்காகவோ பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது.

கரோனா பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு, கல்லூரிக்கு வருமாறு பேராசிரியர்களுக்கு அழுத்தம் தருவதைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x