Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

தேர்தல் வெற்றியை கொண்டாட தடை : அரசியல் கட்சியினருக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேர்தல் வெற்றியை கொண்டாட தலைமை தேர் தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் இதுவரை 7 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதன்பிறகு 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

ஐந்து மாநில தேர்தலின்போது கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப் பாடுகளை அமல்படுத்தி வருகிறது. கேரளாவில் தேர்தல் பிரச்சார நிறைவு நாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்த முறை, நிறைவுநாள் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணை யம் தடை விதித்தது. மேற்குவங்கத்தில் வாகன பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக தேர்தல் பிரச் சாரத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கண்டித்தது. தமிழக வாக்கு எண் ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல் படுத்தாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி எச்சரித்தார்.

இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கவுள்ளதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தை மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதற்காக மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும். மே 2-ல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் இரு மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அரசியல் கட்சியினர் தேர்தல் வெற்றியை கொண்டாட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கும்போது அரசியல் கட்சியினர் கூட்டமாக கூடி பட்டாசு வெடிப்பதோ, ஊர்வலமாக செல்வதோ கூடாது. கூட்ட மாக தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. தேர்தல் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ள வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே உடன் வரலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

பாஜக வரவேற்பு

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் வெளியிட்ட பதி வில், "தேர்தல் வெற்றி கொண்டாட்டங் களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித் திருப்பதை வரவேற்கிறோம். ஆணைய உத் தரவை பாஜகவின் அனைத்து மாநில பிரிவு களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்த பாஜக வினர் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x