Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில்நேற்று நடந்த ஏலத்தில், கொப்பரை விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 785 குறைந்ததால் விவசா யிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, “ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 778 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அவற்றை தரம் பிரித்து ஏலம் விட்டதில், முதல்தர கொப்பரை 420 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் ரூ.11 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.12 ஆயிரத்து 55-க்கும் விற்பனையானது.2-ம் தர கொப்பரை 358 மூட் டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரத்து 500-க்கும், குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. 8 வியாபாரிகள், 138 விவசா யிகள் ஏலத்தில் பங்கேற்றனர். குவிண்டாலுக்கு இந்த வாரம் ரூ. 785 விலை குறைந்து காணப்பட்டது. மொத்தம் 365 குவிண்டால் ரூ.40 லட்சத்துக்கு ஏலமிடப் பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT