Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
பயணிகள் எண்ணிக்கை குறை வால் கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் இயக்கப் படும் 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்டரயில்வே அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பின்வரும் சிறப்பு ரயில்கள்தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல்-கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் (எண்:06029) வரும் 29-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கோவை-சென்னை சென்ட்ரல் இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் (எண்:06030), கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையேயான உதய் சிறப்பு ரயில் (எண்:06154), கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை இடையே யான உதய் சிறப்பு ரயில் (எண்:06153), கோவை வழியாக இயக்கப்படும் கொச்சுவேலி-பனஸ்வாடி இடையேயான ஹம்சாஃபர் சிறப்பு ரயில் (எண்:06319) ஆகியவை வரும் 29-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன.
பனஸ்வாடி-கொச்சுவேலி இடையேயான ஹம்சாஃபர் சிறப்பு ரயில் (எண்:06319) வரும் 30-ம் தேதி முதலும், கோவை போத்தனூர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்-பனஸ்வாடி இடேயேயான சிறப்பு ரயில் (எண்:06129) வரும் மே 3-ம் தேதி முதலும், பனஸ்வாடி-எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் (எண்:06130) வரும் மே 4-ம் தேதி முதலும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT