Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

நிலப்பிரச்சனையில் முதியவர் தற்கொலை :

தேனி

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (65) தச்சு வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாததால் தனியே வசித்தார். இவருக்குச் சொந்தமான ஆறு சென்ட் இடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் அருகே உள்ளது. இந்த இடத்தை உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சனை இருந் துள்ளது. முன்பணம் மட்டும் கொடுத்து விட்டு இடத்தை சிலர் அபகரித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த முருகன் நேற்று சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி போலீஸார் அவர் வைத்திருந்த கடிதத்தைக் கைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x