Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

மே 1, 2-ம் தேதிகளில் - டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை :

சேலம்

தொழிலாளர் தினம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உத்தரவின்படி, வரும் 1-ம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் மறுநாள் 2-ம் தேதி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஒட்டல் பார்கள் அனைத்தும் மூட வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x