Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
நாட்றாம்பள்ளி அரசு மருத்துவ மனையில் பாம்பு நுழைந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனை யின் ஒரு பகுதியில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிறப்பு வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, கரோனா சிறப்பு வார்டில் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து வார்டுக்குள் நுழைந்தது.
இதைக்கண்ட நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். கரோனா நோயாளிகள் வெளியே வந்ததால் மருத்துவ மனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந் தனர். பிறகு, நடத்தப்பட்ட விசார ணையில் கரோனா சிறப்பு வார்டுக் குள் பாம்பு நுழைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நோயாளிகள் வெளியே நிறுத்தப்பட்டனர். பிறகு, திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள், விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு 6 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT