Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே உள்ள கோபால்சாமி மலைக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கோபால்சாமி மலையில் அமைந்துள்ள நந்தகோபால் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுவாமிக்கு நித்தியப்படி பூஜைகள் மட்டுமே நடைபெறும், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளது.
கோயில் நுழைவாயிலில் வனத்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT