Published : 25 Apr 2021 06:11 AM
Last Updated : 25 Apr 2021 06:11 AM

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி :

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன். சென்னையில் வசித்து வந்த அவருக்கு நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை குடும்பத் தினர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத் துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

மருத்துவர்களிடம் கேட்ட போது, பொள்ளாச்சி ஜெய ராமனுக்கு சிகிச்சைகள் அளிக் கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x