Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM
உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுவோர், வீடு,வீடாகச் சென்று குப்பையை சேகரித்து, உரக்கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் இதற்கு மாறாக துப்புரவுப் பணியாளர்களே குப்பையை தீயிட்டு எரிப்ப தால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ உடுமலை நகராட்சிக்குட்பட்ட குட்டைத் திடல், ராமசாமி நகர், ஏரிப்பாளையம், ஆர்.கே.ஆர். சாலை என பல இடங்களிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு, துப்புரவுப் பணியாளர்களே தீவைக்கின்றனர். இதனால் எழும் புகையால் சுற்றுச் சூழல்மாசடைவதோடு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதை களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பெ.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘இதுதொடர்பான புகார்கள் ஏற்கெனவே வந்துள்ளன. விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, தொடர்புடைய பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT