Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

புதுச்சேரியில் புதிதாக - 792 பேருக்கு கரோனா தொற்று மேலும் 2 பேர் உயிரிழப்பு :

புதுச்சேரி

புதுச்சேரி சுகாதாரத்துறை செய லர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 5,081 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி யில் 620, காரைக்காலில் 92, ஏனா மில் 47, மாஹேவில் 33 என மொத்தம் 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,372 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவ மனைகளில் 1,297, வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டோர் 5,033 என மொத்தமாக 6,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த 57 வயது ஆண் நபர், கருவடிக்குப்பம் காந்தி நகரைச் சேர்ந்த 53 வயது

ஆண் நபர் என 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 728 ஆக அதிகரித்துள்ளது. இறப்புவிகிதம் 1.42 சதவீதமாக உள்ளது.

இதனிடையே நேற்று 383 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 44,314 (86.26 சதவீதம்) ஆக உயர்ந் துள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 466 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 80 ஆயிரத்து 750 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 6,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x