Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

தட்டச்சு பயிற்சி மையங்கள் இயங்க தடை :

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி மையங்கள் இயங்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன்அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘தமிழகத்தில் கரோனா பரவல்அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார்பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, மறு உத்தரவு வரும்வரைதட்டச்சு பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைனில்விண்ணப்பிக்க ஏப்.26 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x