Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
கரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கு 3 விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கையுடன் பாஜக செயல்படுகிறது. ஆனால் கரோனா தடுப்பூசிக்கு 3 விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். வயது, சாதி, இருப்பிடம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT