Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் எம்.பி.யான சசி தரூர் நேற்று முன்தினம் மாலை தனது ட்விட்டர் பதிவில், “பரிசோதனைக்காக 2 நாள் காத்திருப்பு, பரிசோதனை முடிவுக்காக ஒன்றரை நாள் காத்திருப்புக்கு பிறகு எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வு, நீராவி மற்றும் ஏராளமான திரவங்களுடன் நேர்மறையான எண்ணத்துடன் இதனை எதிர்கொள்வேன் என நம்புகிறேன். எனது சகோதரியும் 85 வயதான தாயும் என்னுடன் பயணிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
இதுபோல், மக்களவை காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் மாலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களான என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை இணைய வழியில் தொடருவேன்" என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். மறுநாள், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT