Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

41 கைதிகளுக்கு கரோனா பரவல் - புதுச்சேரி மத்திய சிறையில் பரோல், பார்வையாளர் அனுமதி ரத்து : மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி மத்திய சிறையில் கைதி களுக்கு கரோனா பரவலால் பரோல், பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி யார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள கைதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்த தண்டனை கைதி, பாதுகாப்புக்கு சென்ற சிறை வார்ட னுக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. தண்டனை கைதிகள் அடைக்கப்பட்ட யார்டில் உள்ள பிற கைதிகளுக்கும் உடல்வலி, சோர்வு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை பரிசோதித்ததில் சிறை துணை கண்காணிப்பாளர், 2 வார்டர்கள், 41 தண்டனை கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைதிகள் அனைவரும் அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துணை கண்காணிப்பா ளரும், வார்டர்கள் இருவரும் கோவிட் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கரோனா அதிகரிப்பால் மத்தியசிறையில் பரோல், பார்வையா ளர்கள் அனுமதி ரத்தாகியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் குறிப்பிட்டனர். அத்துடன் சிறையில் முகக்கவசத்துடனும், சமூக இடைவெளி யுடனும் இருக்க கைதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளது. தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப் பிட்டனர்.

துப்பாக்கி ஏந்திய

போலீஸ் பாதுகாப்பு

தனியார் மருத்துவக் கல்லூரி யில் கரோனா சிகிச்சையில் 41 தண்டனை கைதிகள் உள்ளதால் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதி முழுக்க போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x