Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம், நகராட்சி, வருவாய், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், அரசு கல்லூரி, வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில், பிஎஸ்என்எல் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, சரியான முறையில் சிக்னல் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணுமாறு பல்வேறு தரப்பினரும் பிஎஸ்என்எல் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், ஆட்சியர் அலுவலகத்தையொட்டியுள்ள கணக்கு மற்றும் கருவூலத் துறை அலுவலகத்தின் மேல்தளத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் என்எஸ்என் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3ஜி சேவைக்கான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இக்கோபுரத்தின் மூலம் 750 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 2ஜி, 3ஜி சேவை தடையற்ற வகையில் சிறப்பாக கிடைக்கும் என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
750 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 2ஜி, 3ஜி சேவை தடையற்ற வகையில் சிறப்பாக கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT