Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை :

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.

இதில் குற்றவாளி நாச்சிமுத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இதனை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x