Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஏப்ரல் 21-ம் தேதி தேசிய குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் குடிமைப் பணியாளர்கள் அதிகம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தக் கடினமான காலகட்டத்தில், இவ்வளவு பெரிய நாட்டை முன்னகர்த்திச் செல்லும் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் எனதுவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், “எனது தாத்தா ஜெகதீஷ், எனது ஒன்றுவிட்ட தாத்தா கைலாஷ் இருவரும் இரண்டாம் உலகப் போரின்போது குடிமைப் பணியாளர்களாக சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT